ஜப்பான் நிலநடுக்கம் | இதுவரை 73 பேர் உயிரிழந்ததாக அறிவிப்பு

ஜப்பான் நிலநடுக்கம் | இதுவரை 73 பேர் உயிரிழந்ததாக அறிவிப்பு
By: TeamParivu Posted On: January 04, 2024 View: 53

டோக்கியோ: ஜப்பானில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் இதுவரை 73 பேர் உயிரிழந்துள்ளதாக ஜப்பான் அரசு அறிவித்துள்ளது. மேலும் தொடர்ந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் நடந்து வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
மரணமடைந்த அனைவரும் முதல் நிலநடுக்கம் ஏற்பட்ட இஷிகாவா மாகாணத்தை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 33 ஆயிரத்துக்கு அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாகவும், 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் சேவை துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.
இடிபாடுகளில் சிக்கிய மக்களை மீட்கும் பணியில் ஆயிரக்கணக்கான வீரர்கள் கனமழையிலும், உறைய வைக்கும் குளிரிலும் ஈடுபட்டு வருகின்றனர். சேதமடைந்த சாலைகளால் தொலைதூரத்தில் உள்ள கிராமங்களில் மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி 1-ம் தேதி ஜப்பானில் அடுத்தடுத்து நிலநடுக்கம் பதிவானது. நோட்டோ தீபகற்பத்தில் இஷிகாவா மாகாணத்தில் ஏற்பட்ட முதல் நிலநடுக்கம் 7.6 ரிக்டராகப் பதிவானது. தொடர்ந்து ஏற்பட்ட நிலநடுக்கங்கள் 3.2 ரிக்டர் முதல் 7.5 ரிக்டர் வரை பதிவாகின.

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..